Skip to main content

Posts

ஆண்கள் இவைகளை செய்வது மன்னிக்க முடியாத பாவமாம்… ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்,போது,பிரேதத்தின் பின் போகுதல்,முடிவெட்டுதல்,மலை ஏறுதல்,சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல்,வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது, மேலும்,கணவன்,கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும் நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை 1கன்றுக்குட்டி,மாடு ஆகியஇவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது 2,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது 3,நிலையில் அமரக்கூடாது 4,மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது 5,தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது 6,துணி இல்லாமல் குளிக்கக் கூடாது 7,சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது 8,நெருப்பை வாயினால் ஊதக்கூடாது 9,அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது 10,துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிர...
Recent posts
வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டுமா?  இதனை செய்திடுங்கள்! அப்புறம் உங்க வாழ்கை சிறப்பு தான் பாஸ்!!    நம்மிடத்தில் எத்தனை வளங்கள் இருப்பினும் செல்வ வளம் முக்கியமானது, பெரும்பாலானோரின் எதிர்ப்பார்ப்பும் அதுவே. அதனாலேயே அஷ்டலட்சுமிகளில் தனலட்சுமிக்கு வரவேற்பு அதிகம். சில வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தாலே திருமகளின் அருள் நமக்கு முழுவதுமாகக் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி குபேர காலத்தில் குபேரனை வழிபடவேண்டும். குபேரனுக்கு ஊறுகாய் மிக பிடித்தமானதாகும். எனவே வீட்டில் விதவிதமாக ஊறுகாய் இருந்தால் குபேரன் அருள் கிடைக்கும். வீட்டில் வெள்ளைப் புறா வளர்த்தால் பணத்தட்டுப்பாடு நீங்கும். தினம் மாலை வேளையில் ஐந்துமுக குத்து விளக்கில் டைமன் கல்கண்டினை போட்டு விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் பெருகும். பகல் 12 மணிக்கு (அபிஜித் நட்சத்திரத்தில்) திருநங்கையருக்கு திருப்தி அளிக்கும் வண்ணம் உணவளித்து அவர் கையால் பணம் பெற்று கொண்டால் செல்வம் நிலைத்திருக்கும். வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், ஊசி, குடிநீர், உப்பு போன்றவற்றை யாருக்கும் கொடுக்கக்கூடா...

திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது?

திருமண பொருத்தமா? பணப் பொருத்தமா?  மன பொரு்தமா அல்லது நல்ல குண பொருத்தமா! மாங்கல்ய பொருத்தமா? நட்சத்திர பொருத்தமா எது முக்கியம்! திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது?  1) தினப்பொருத்தம்:-  கணவன் மனைவிக்கிடையே தினமும் சண்டை இல்லாமல் மனம் ஒத்து வாழக்கூடிய யோகம் உண்டா என்று கண்டறிய பயன்படும் வழிமுறையே தினப்பொருத்தம் ஆகும். பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம். 2) கணப்பொருத்தம் கணம் என்றால் கூட்டம் என பொருள் படும். மூன்று வகை கணங்களாக அல்லது கூட்டமாக 27 நட்சத்திரங்களும் பிரிவினை செய்யப் பட்டுள்ளன. இதன்மூலம் இருவரின் இல்லறசுகம், ஒற்றுமை இவை தீர்மானிக்கப் படும். தேவ கணம் & மனுஷ கணம் & ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும். தேவகணம் - அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி மனுஷ கணம் - பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி ராட்சஸ கணம்-கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, ம...

உங்கள் ஸ்மார்ட்போன்… சூடு (HEAT) ஆகாமல் தடுப்ப‍து எப்ப‍டி?

உங்கள் ஸ்மார்ட்போன்… சூடு (HEAT) ஆகாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – தொழில்நுட்ப குறிப்புக்கள் உங்கள் ஸ்மார்ட்போன்… சூடு (HEAT) ஆகாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – தொழில்நுட்ப குறிப்புக்கள் உலகளவில் ஸ்மார்ட்போன்கள் உபயோகப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் போனில் முக்கிய பிரச்ச னையே அது சீக்கிரம் சூடாகி விடுவது தான். அதை எளிதாக தடுக்க என்ன வழி? பொதுவாக ஸ்மார்ட்போன்களில் 4G & 3G இணையம் அதி களவில் உபயோகப்படுத்தப்படுகிறது. பலர் இணைய Data வை அணைத்து வைக்காமல் உள்ளதால் போன் சூடாகி றது. உபயோகப்படுத்தாத சமயத்தில் இணையத்தை அணை த்து வைத்தால் போன் சூடாவது குறையும். ஒரே நேரத்தில் அதிகளவு ஆப்ஸ்கள் செயல் பட்டிருந்தால் கூட போன் சீக்கிரம் சூடாகி விடும். தேவையி ல்லாததை ஸ்விச் ஆப் செய்து வைக்க லாம். செயல்மேம்படுத்துதல் (Processor Optimization) உங்கள் மொ பைலை பல விதங்களில் மேம்படுத்தியும் சூடாகின்றதா. பின்பு நீங்கள் செய்யவேண் டியது ரோம் (ROM) ஆப்ஸை நிறுவ வே ண்டும். இது உங்கள் போனை சூடாவதிலிருந்து காக்கும். சார்ஜ்செய்யும்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்தகூடாது. அப்ப...

1887-ல் இருந்து அச்சுபதிக்கப்பட்ட அனைத்து புத்தகங்களும் இங்கு உள்ளன

இந்த link  ல்,  பழைய அரிய தமிழ் புத்தகங்கள் நிறைய உள்ளன. தேடி எடுத்துக்கொள்ளுங்கள்..   http://www.dli.ernet.in/handle/2015/247323/recent-submissions?offset=700  1887-ல் இருந்து அச்சுபதிக்கப்பட்ட அனைத்து புத்தகங்களும் உள்ளன. மொத்தம் 5376 புத்தகங்கள் PDF கோப்பாக உள்ளது.

பொன் மொழி ‍ பழமொழிகள்

பொன் மொழி ‍ பழமொழிகள் 01. ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவனுடைய மரணத்தின்போதுதான் தீர்மானமாகிறது. 02. இயற்கை என்னும் தாய் மார்பில் பால் குடிக்கும் தன் குழந்தையை ஒரு மார்பில் இருந்து இன்னொரு மார்பிற்கு மாற்றும் போது ஏற்படும் இடைவெளியே மரணம். 03. வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளக் கூடாது. 04. மனிதர்கள் இறந்த பின்னர்தான் அவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம். 05. பிறப்போடு பிறந்தது மரணம். 06. மரணம் என்பதும் வாழ்வு என்பதும் இரண்டு வேறு வேறான சங்கதிகள் அல்ல வாழ்க்கையை அனுபவிப்பதென்பது மரணத்தை அனுபவிப்பதுதான். 07. செத்தவன் வாயில் மண் இருந்தவன் வாயில் சோறு. 08. கெட்ட செய்திகள் போல வேறு எதுவுமே வேகமாகப் பரவுவதில்லை. 09. காத்துக் கொண்டிருக்காதே நீ ஒருபோதும் செயற்படமாட்டாய். 10. குனியாதே சுமப்பாய் நிமிர்ந்தால் உயர்வாய். 11. நன்றி மறவாத வாழ்வு நம்மை அறியாமலே உயரும். 12. வார்த்தைகள் அசிங்கமானால் வாழ்வும் அசிங்கமாகும். 13. ஆழமான அறிவே அழகான வாழ்வை அமைக்கும். 14. புத்தகம் இல்லாத வீடு சன்னல் இல்லாத இருட்டறை போன்றது. 15. துன்பத்தை மறந்தாலும் அது புகட்டிய பாடத்தை மற...

மனதை தொட்ட வரிகள்...!

` எழுதியவர் யார் என்று தெரியவில்லை ; ஆனால் படித்துப் பாருங்கள் ,  கரைந்து போவீா்கள் ; 😨😨😰😰😰 வாழைத் தோட்டத்திற்குள் வந்து முளைத்த... காட்டுமரம் நான்..! எல்லா மரங்களும் எதாவது... ஒரு கனி கொடுக்க , எதுக்கும் உதவாத... முள்ளு மரம் நான்...! தாயும் நல்லவள்... தகப்பனும் நல்லவன்... தறிகெட்டு போனதென்னவோ நான்... படிப்பு வரவில்லை... படித்தாலும் ஏறவில்லை... இங்கிலீஷ் டீச்சரின் இடுப்பைப் பார்க்க... இரண்டு மைல் நடந்து பள்ளிக்கு போவேன் . பிஞ்சிலே பழுத்ததே.. எல்லாம் தலையெழுத்தென்று எட்டி மிதிப்பான் அப்பன்... பத்து வயதில் திருட்டு... பனிரெண்டில் பீடி... பதிமூன்றில் சாராயம்... பதினாலில் பலான படம்... பதினைந்தில் ஒண்டி வீட்டுக்காரி... பதினெட்டில் அடிதடி... இருபதுக்குள் எத்தனையோ... பெண்களிடம் விளையாட்டு... இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு... எட்டாவது பெயிலுக்கு... ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ? மண்லாரி ஓட்டினால் லோடுக்கு... நூறு தருவார்கள . வாங்கும் பணத்துக்கு... குடியும் கூத்தியாரும் என... எவன் சொல்லியும் திருந்தாமல்... எச்சிப் பிழைப...