Skip to main content

பொன் மொழி ‍ பழமொழிகள்

பொன் மொழி ‍ பழமொழிகள்


01. ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவனுடைய மரணத்தின்போதுதான் தீர்மானமாகிறது.

02. இயற்கை என்னும் தாய் மார்பில் பால் குடிக்கும் தன் குழந்தையை ஒரு மார்பில் இருந்து இன்னொரு மார்பிற்கு மாற்றும் போது ஏற்படும் இடைவெளியே மரணம்.

03. வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளக் கூடாது.

04. மனிதர்கள் இறந்த பின்னர்தான் அவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம்.

05. பிறப்போடு பிறந்தது மரணம்.

06. மரணம் என்பதும் வாழ்வு என்பதும் இரண்டு வேறு வேறான சங்கதிகள் அல்ல வாழ்க்கையை அனுபவிப்பதென்பது மரணத்தை அனுபவிப்பதுதான்.

07. செத்தவன் வாயில் மண் இருந்தவன் வாயில் சோறு.

08. கெட்ட செய்திகள் போல வேறு எதுவுமே வேகமாகப் பரவுவதில்லை.

09. காத்துக் கொண்டிருக்காதே நீ ஒருபோதும் செயற்படமாட்டாய்.

10. குனியாதே சுமப்பாய் நிமிர்ந்தால் உயர்வாய்.

11. நன்றி மறவாத வாழ்வு நம்மை அறியாமலே உயரும்.

12. வார்த்தைகள் அசிங்கமானால் வாழ்வும் அசிங்கமாகும்.

13. ஆழமான அறிவே அழகான வாழ்வை அமைக்கும்.

14. புத்தகம் இல்லாத வீடு சன்னல் இல்லாத இருட்டறை போன்றது.

15. துன்பத்தை மறந்தாலும் அது புகட்டிய பாடத்தை மறக்காதே.

16. ஓர்மம் ஒப்பற்ற சாதனைகளை உருவாக்கும்.

17. உருப்படியான வேலைக்கே உலகம் உன்னை அழைத்திருக்கிறது மறந்துவிடாதே.

18. அரிய சந்தர்ப்பங்கள் தேடி வரும்போது அதைப் பயன்படுத்தத் தவறாதே

19. உங்கள் நேரம் உங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படுவதை உணருங்கள்.

20. ஆழமான அர்த்தங்களும் அதிகமான தத்துவங்களும் அடங்கியதே வாழ்க்கை.

21. பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை

22. வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை.

23. புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான்

24. தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை

25. காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்

26. எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்

27. வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச்செல்லாதே, வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா

28. குழந்தையை ரசிக்கக் கற்றுக்கொள். குணவானாவாய்

29. இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.


Comments

Popular posts from this blog

திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது?

திருமண பொருத்தமா? பணப் பொருத்தமா?  மன பொரு்தமா அல்லது நல்ல குண பொருத்தமா! மாங்கல்ய பொருத்தமா? நட்சத்திர பொருத்தமா எது முக்கியம்! திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது?  1) தினப்பொருத்தம்:-  கணவன் மனைவிக்கிடையே தினமும் சண்டை இல்லாமல் மனம் ஒத்து வாழக்கூடிய யோகம் உண்டா என்று கண்டறிய பயன்படும் வழிமுறையே தினப்பொருத்தம் ஆகும். பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம். 2) கணப்பொருத்தம் கணம் என்றால் கூட்டம் என பொருள் படும். மூன்று வகை கணங்களாக அல்லது கூட்டமாக 27 நட்சத்திரங்களும் பிரிவினை செய்யப் பட்டுள்ளன. இதன்மூலம் இருவரின் இல்லறசுகம், ஒற்றுமை இவை தீர்மானிக்கப் படும். தேவ கணம் & மனுஷ கணம் & ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும். தேவகணம் - அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி மனுஷ கணம் - பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி ராட்சஸ கணம்-கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, ம...

1887-ல் இருந்து அச்சுபதிக்கப்பட்ட அனைத்து புத்தகங்களும் இங்கு உள்ளன

இந்த link  ல்,  பழைய அரிய தமிழ் புத்தகங்கள் நிறைய உள்ளன. தேடி எடுத்துக்கொள்ளுங்கள்..   http://www.dli.ernet.in/handle/2015/247323/recent-submissions?offset=700  1887-ல் இருந்து அச்சுபதிக்கப்பட்ட அனைத்து புத்தகங்களும் உள்ளன. மொத்தம் 5376 புத்தகங்கள் PDF கோப்பாக உள்ளது.

மனதை தொட்ட வரிகள்...!

` எழுதியவர் யார் என்று தெரியவில்லை ; ஆனால் படித்துப் பாருங்கள் ,  கரைந்து போவீா்கள் ; 😨😨😰😰😰 வாழைத் தோட்டத்திற்குள் வந்து முளைத்த... காட்டுமரம் நான்..! எல்லா மரங்களும் எதாவது... ஒரு கனி கொடுக்க , எதுக்கும் உதவாத... முள்ளு மரம் நான்...! தாயும் நல்லவள்... தகப்பனும் நல்லவன்... தறிகெட்டு போனதென்னவோ நான்... படிப்பு வரவில்லை... படித்தாலும் ஏறவில்லை... இங்கிலீஷ் டீச்சரின் இடுப்பைப் பார்க்க... இரண்டு மைல் நடந்து பள்ளிக்கு போவேன் . பிஞ்சிலே பழுத்ததே.. எல்லாம் தலையெழுத்தென்று எட்டி மிதிப்பான் அப்பன்... பத்து வயதில் திருட்டு... பனிரெண்டில் பீடி... பதிமூன்றில் சாராயம்... பதினாலில் பலான படம்... பதினைந்தில் ஒண்டி வீட்டுக்காரி... பதினெட்டில் அடிதடி... இருபதுக்குள் எத்தனையோ... பெண்களிடம் விளையாட்டு... இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு... எட்டாவது பெயிலுக்கு... ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ? மண்லாரி ஓட்டினால் லோடுக்கு... நூறு தருவார்கள . வாங்கும் பணத்துக்கு... குடியும் கூத்தியாரும் என... எவன் சொல்லியும் திருந்தாமல்... எச்சிப் பிழைப...